
posted 5th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
அதிபருக்கு நாகர்கோவிலில் பிரிபு உபசார விழா
யா/நாகர் கோவில் மகா வித்தியாலயத்தில் ஐந்து வருடங்கள் அதிபராக கடமையாற்றி இடமாற்றலாகி செல்கின்ற கு. கண்ணதாசன் அவர்களின் பிரிவு உபசார விழா 03.04.2024 புதன் கிழமை அன்று யா/நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இதன் முதன் நிகழ்வாக இசை வாத்தியங்களுடன் அதிபர் கண்ணதாசன் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து மாணவர்களாலும், சமூகமட்ட அமைப்புகளாலும், ஆசிரியர்களாலும் அதிபர் கெளரவிக்கப்பட்டு அவருக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்விற்கு வடமராட்சி கிழக்கு வலயக்கல்வி கணித பாட ஆலோசகர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், சமூகமட்ட பிரதிநிதிகள், கிராம மக்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)