
posted 22nd April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
6 இலட்சம் பெறுமதியான வயர்கள் திருட்டு
யாழ்ப்பாணம் வடமராட்சி கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழக மைதானத்தில் பொருத்தப்பட்டிருந்த ரூபா 6 இலட்சம் பெறுமதியான மின் வயர்கள் திருடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று திங்கட்கிழமை, 22/04/2024, பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் றேஞ்சஸ் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டிகளை மின்னொளியில் நடாத்திவருகிறது. அது தற்போது அரையிறுதி போட்டி வரை வந்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் வாரமளவில் இறுதிப் போட்டியை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை மைதானத்தில் மின்னொளிக்காக பொருத்தப்பட்டிருந்த வயர்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
களவாடப்பட்டுள்ள வயர்களின் தற்போதைய சந்தை பெறுமதி சுமார் 6 லட்சம் ரூபா எனவும் றேஞ்சஸ் கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)