
posted 2nd April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
100 குடும்பங்களுக்கு காணி உறுதி வழங்கல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காணி உறுதிகள் இல்லாத 100 குடும்பங்களுக்கு காணி உறுதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வழங்கப்பட்டது.
பிரதேச செயலாளர் என். சத்தியானந்தி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம். கோபாலரெத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காணி அனுமதிப் பத்திரத்திற்காக விண்ணப்பித்த மக்களில், இலுப்படிச்சேனை, வவுணதீவு, மகிழவட்டவான் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 100 பேருக்கே காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)