posted 18th May 2026
இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;
- காவேரி குதூகலமாக அம்முவுடன் உரையாடிக் கொண்டிருந்தாள் – விஜேய் உள் நுழைந்தான்
- றாதாவின் கோபத்தைக் கணக்கெடுக்காத காவேரி
- தங்களது தப்புக்களை உணர்ந்த தாத்தா, எப்படியாவது காவேரியை விஜயுடன் சேர்த்து வைக்க கங்கணம்
- அம்முவின் ஆசையைத் தவிர்க்க முடியாமல் தவிக்கும் காவேரி
- சாராதாவின் குடும்பத்தினை இன்றுடன் உறவை முறித்துக் கொள்ளுவோம் என்ற விஜய்.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 15.05.2026
காவேரியின் காரசாரமான பேச்சினால் நிலை குலைந்த விஜயின் கோபமும், வேதனையும், கலக்கமும் ஆறவில்லை, காவேரி அம்முவுடன் படுக்கை அறையினுள் கதைத்துக் கொண்டிருந்தாள். இதைக் கண்ட விஜேய் அதிர்ச்சியில் விளித்துக் கொண்டிருந்தான். என்ன நடக்கின்றது என்று கூடத் தெரியாமல் திகைத்தான்.
காவேரியோ எதிர்பார்த்தாள், விஜேயைச் சந்திப்பாள் என்று. கோவிலில் இருந்து கவலையில் தான் கூடக் கதைத்து விட்டோமோ என்று கவலை கொண்டாள். தெய்வத்திடம் பாரத்தினைப் போட்டாள், நல்வழி தனக்குக் காட்டும்படி.
அம்முவைக் கண்டது காவேரிக்கோ மிகவும் ஆறுதலாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் அம்முவுக்கும் காவேரி மிஸைக் கண்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அந்த சந்தோஷத்தினை அனுபவித்துக் கொண்டிருந்தாள் அம்மு. அதனையும் விஜய் கண்டு கொண்டான்.
காவேரியைக் கண்டதும் விஜய் மிகவும் ஆத்திரப்பட வெளிக்கிடலாம். ஆனால், அந்தக் கணமே காவேரி விஜேயிடம் மன்னிப்புக் கேட்க வாய்ப்புகள் உண்டு. அதற்கும்தானே காவேரி கோவிலிலிருந்து வீ்ட்டிற்குப் போகாமல் நேராக அம்முவின் வீட்டிற்கு வந்தாள். காவேரியின் அமைதியான பேச்சு விஜயைக் cool பண்ணியும் விடலாம். ஏனென்றால், குழந்தைக்கு முன்னால் தன்னை விஜேய் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உண்டெனலாம்.
காவேரியைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்தது சாரதாவின் குடும்பம். காலையிலே, சண்டை போட்டுக் கொண்டு பாடசாலைக்கு புறப்பட்டவள் காவேரி. இன்னமும், இவ்வளவு நேரமாகியும் வீட்டிற்குத் திரும்பாதது சாரதாவிற்குப் பீதியினைக் கிளப்பியது. நெவீனும் காவேரியைத் தேடி பாடசாலைக்குப் புறப்பட்டான். ஆனால் காவேரியோ அங்கு ஒய்யாரமாக அம்முவுடன் கதைத்துக் கொண்டிருந்தாள்.
றாதாவின் பேச்சை காவேரி கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், காவேரியின் குறிக்கோளே தான் கூடுதலாகவும், கடுப்பாகவும் விஜேயைப் ஏசி விட்டோமே என்ற கவலைதான். இதனால், அம்முவையும் காண வேண்டும், விஜேயிடம் மன்னி்ப்புக் கேட்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்ததாக நினைக்கத் தோன்றுகின்றது.
அம்முவைப் பார்க்க வந்த சாரதாவுடனும், கங்காவுடனும் தனது ஆதங்கத்தினை விஜேய் கூறினாலும், சாரதாவும், கங்காவும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு பேத்தியால் அப்படி அம்மோ என்று அந்தக் குழந்தையை விட்டு விட்டு ஒதுங்கிடலாமா? பெரியவர்களின் பிரச்சனைகளுக்குள் குழந்தையை ஏன் நாங்கள் தண்டிக்க வேண்டும் என்பதானது மிகவும் நியாயமான விளக்கமாக இருக்கின்றது.
றாதாவின் கோபம் நியாயமானது. காரணம் காவேரியைத் தேடி ஒருவருக்கும் சொல்லாமல் தனியாபவே வீ்ட்டை விட்டு வெளிக்கிட்டு எங்கு போனாள் என்று கூட ஒருவருக்கும் தெரியவில்லையே. அப்போது எப்படி இருக்கும் றாதாவுக்கும, மற்றவர்களுக்கும்.
ஆனால், வீட்டிற்கு வந்தவர்களை, அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் இன்முகம் காட்டி வரவேற்பதுதானே நமது இனத்தின் பண்பாடு. அதைத்தான் தாத்தாவும் சொன்னார் அவரின் மகள் றாதாவிற்கு. பணிவாக காவேரியுடன் கதைத்தார் தாத்தா. அம்முவைப் பார்க்கவும் அனுமதித்தார். இதிலிருந்து தாத்தாவின் அனுபவம் வெளிச்சமாகத் தெரிகின்றது.
என்னவாக இருந்தாலும் காவேரி தங்கள் வீட்டின் மருமகள், தனது பேரனின் மனைவி. தங்களாலேதானே காவேரியையும், விஜேயையும் பிரிந்துள்ளார்கள். வைத்தியசாலையிலே இருந்து discharge பண்ணியவுடன் காவேரியை சாரதா வீட்டார் இங்கு விஜேயின் வீட்டிற்குத்தானே கூட்டி வந்தார்கள். அப்போது, கல்யாணிப் பாட்டியின் கொடூர மனத்தினால் சாரதாவும் அவவின் வீட்டாரும், காவேரியும் கலைக்கப்பட்டார்கள். அத்துடன் விஜேயும் இறந்து விட்டான் அந்த விபத்தினிலே என்று அப்பட்டமான பொய்யினையும் சொன்னார்கள். அதுமட்டுமல்லாமல், அம்முவைப் பறித்து இவர்களைத் துரத்தியும் விட்டார்கள்.
இதெல்லாம் தாத்தாவிற்கு ஒரு குற்ற உணர்ச்சியை உண்டாக்கி இருக்கலாமல்லவா? ஆனால், றாதாவிற்கு அந்த உணர்வுகள் காவேரி இப்போது அம்முவைப் பார்க்கத் துடி துடித்து வருகையிலே வரவில்லை.
இப்போது எல்லாருக்கும் உள்ள முழு நோக்கமும் காவேரியையும், விஜேயையும் ஒன்றாகச் சேர்த்து வைப்பதுதான். இதற்காக இவர்கள் காவேரி என்னதான் செய்தாலும், திட்டினாலும் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். ஏனென்றால், காவேரிக்கும், விஜேயுக்கும் செய்த துரோக்மானது அந்தளவிற்கு மன்னிக்கவும் முடியாது, மறக்கவும் இயலாது.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!