posted 7th June 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;
- காவேரியின் மனதினில் துளிர்விட்ட மாற்றமானது மேலும் பூவாகுமா?
- பிள்ளைகளில் நம்பிக்கையினை வைக்க வேண்டிய முதல் நபர், தாய்தான்
- நண்பனாக வந்தவன் நல்லவனாக இல்லாமல், நண்பியாக உள்ளவளின் வாழ்க்கையினை அழிப்பதற்கு முனைவதனை எப்படி முடக்கினான் விஜய்.
- காவேரியை போட்டோவில் கண்ட யாழினியின் நடவடிக்கையானது என்னவாக இனி இருக்கும்.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 04.06.2026
காவேரி ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கையிலே விஜேயின் பேச்சு வார்த்தையானது அந்தப் பையனுடன் முடிந்து விட்டது. விஜேய் நல்ல விதமாக, சொல்லும் விதத்திலும் சொல்லி அவனை இனி நர்மதாவின் பக்கம் தலை வைத்துப் படுக்காத வண்ணம் கூறி, அனைவரிடமும், குறிப்பாக நர்மதாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, தோப்புக் கறணம் போட வைத்து அனுப்பி வைக்கப்பட்டான்.
விஜேயின் இந்த அணுகுமுறையானது காவேரியின் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் கவர்ந்தது. ஒருவிதமான பிரச்சினைகள் வெகுவாகாமல் முடிவடைய வைத்தாயிற்று என்ற மனநிம்மதி எல்லோருக்கும். இன்றுதான் சாரதா வீட்டில் எல்லோரும் நிம்மதியாக தூங்குவார்கள் போலும்.
நர்மதா தனது அம்மாவிடம் கேட்ட கேள்வியானது சாரதாவை மிகவும் துக்கத்திற்கு உள்ளாக்கி விட்டது. மகளின் நிலைமையில் தனது அம்மா தன்னில் மேல் நம்பிக்கை வைக்கவில்லையே என்ற ஆதங்கம் நர்மதாவிற்கு. அதுமட்டுமல்லாமல், விஜேய் மாமா தன்னில் மேலே எவ்வளவு நம்பிக்கையினை வைத்துள்ளார். அதுவும் தான் சொன்ன ஒரே வார்த்தையினை முழுவதுமாக நம்பினாரே என்பது நர்மதாவுக்கு சந்தோஷமும் கூட.
தனது அத்தை சாரதாவை, விஜய் சமையல் அறையினுள் சந்தித்து, சாரதாவிற்கு பணிவாக அவ செய்த தவறினை எடுத்துரைத்ததனை காவேரி கதவோரமாக நின்று கேட்டுக் கொண்டிருந்தாள். விஜேயின் பக்குமான வார்த்தைகளானது காவேரியின் மனதினை நெகிழ வைத்தது. விஜேயின் மேலே ஒருவிதமான கௌரவமும், மதிப்பும் உச்சிக்குப் போயிற்று. ஆனால் என்ன, ஒருவிதமான பிரயோசனத்தினையும் காணவி்ல்லையே என்பது நர்மதாவினதும், கங்காவினதும் ஏக்கத்தினை ஏப்பம் விட வைத்துவிட்டது.
பிரச்சினைகள் தீர்ந்து விட்டன. அம்மா சமாதானமாகி விட்டா என்று காவேரி நர்மதாவிடமும், கங்காவிடமும் கூறியதினால், இருவரும் மிகவும் சந்தோஷமானார்கள். ஆனால், இது தன்னால் நடைபெறவில்லை, மாறாக, விஜேய் சாரால்தான் நடைபெற்றது என்று பதிலளித்தாள் காவேரி.
இதனைக் கேட்டதும் கங்காவிற்கும், நர்மதாவிற்கும் மனதினில் ஓடியது காவேரி்க்குக்தான் கேட்கவில்லையே! அவர் மாமாதான் எங்களுக்கு, எனது அக்காவின் புருஷன்தான். உனக்குத்தான் விளங்கவில்லை என்றது நர்மதாவின் உள்மனத்தின் ஓடிக் கொண்டிருந்த வார்த்தைகள்.
விஜேயின் வீட்டிலே மிகவும் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்த யாழினியும், அம்முவும் இறுதியாக, அம்முவின் அம்மாவினதும், விஜயினதும் கல்யாணப் போட்டோக்களினை பார்வையிடத் தொடங்கினார்கள். அம்முவின் அம்மாவைக் கண்டதும் யாழினி மிகவும் ஆச்சரியத்தில் உறைந்தாள். அத்துடன் அம்மு சொன்னதினையும் நம்பவேயில்லை. இது தனது சித்தி காவேரிதான் என்று உறுதியாகச் சொன்னாள்.
இந்தப் படங்களைப் பார்த்ததென்று யாழினி ஒருவரிடமும் சொல்லக் கூடாதென்று கேட்டுக் கொண்டாள் அம்மு. ஆனால், இதனை யாழினி சொல்லாமல் மறைப்பாளா? அவளால் இதனை மறைக்க முடியுமா? இதென்ன பெரியவர்கள் கேட்டுக் கொண்ட சத்தியமா? இவர்கள் சிறுவர்கள். யாழினி, வீட்டிற்குப் போனதும் காவேரியிடம் சொல்லத்தான் போகின்றாள்.
யாழினியும், அம்முவும் ஒரவரொருவரின் பக்கத்தில் ஒய்யாரமாகப் படுத்துறங்கிய வண்ணமாக இருந்தார்கள். இவர்களைப் பார்த்து விஜய் சந்தோஷத்தில் ஆழ்ந்தான்.
வீட்டிற்குப் போகும் யாழினி, காவேரியிடம் போட்டோ விஷயத்தினைச் சொல்லுவாளா? அல்லது கங்காவிடம் சொல்லுவாளா?
கங்காவிடம் சொன்னால், கங்கா யாழினியை ஒருவரிடமும் சொல்ல வேண்டாம் என்று மறைத்து விடுவா.
ஆனால்,யாழினி நேராகவே காவேரியிடம் சொன்னால், காவேரி அந்தப் படங்களைப் பார்ப்பதற்கு முயற்சி செய்வா. அத்துடன் அதற்கு ஒரு கரை காண்பாள்.
இதெல்லாம் இப்படித்தான் நடக்குமா?
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!