posted 3rd October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- குமரன் அமைதியானான். கங்காவின் தொண தொண என்ற வார்த்தைகள் அவனைக் கொன்று கொண்டிருந்தது. என்ன செய்கின்றான் என்று விஜேயும் ஒன்றும் காவேரிக்கும் சொல்லவில்லை.
- எல்லாம் பெரிய அளவினில் குமரன் கங்கா ஆசைப்படி செய்ய வேண்டும் என்று காவேரியுடன்தான் கதைப்பான். ஆனால், காசுக்கு எல்லாம் என்ன செய்கின்றான் குமரன் என்று காவேரி்க்கும் புரியவில்லை.
- மனைவியின் அமைதியான வார்த்தைகள் இருந்தாலே போதும், ஆணாகப் பிறந்தவன் மலையையும் தூக்கிக் கொண்டு வருவான். அதுதான் குமரனுக்கு கானல் நீராகவல்லவா இருக்கின்றது.
- உழைப்பின் பலனாக பணத்தினை கங்காவிடம் கொடுக்கையிலே இவ்வளவு பணம் எங்கால இருந்து வந்தது? என்று பதுமையாகக் கேட்டிருந்தால் சிலசமயம் குமரன் சொல்ல வாய்ப்பிருக்கின்றது. அதுதான் குதிரைக் கொம்பாகவுள்ளதே.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 03.10.2025
மௌனத்தைக் கலைக்காத கலைக்க விரும்பாத குமரன். அயராத உழைப்பு, நித்திரையின்மை, அதிகமான வேலையினை குறுகிய காலத்துள் முடிக்க வேண்டும் என்ற கட்டாயம், இதனால், ஓய்வற்ற ஆறாத உடல், தாங்க முடியாத நிலை, என்ன நடக்கப் போகின்றது? என்பதுதான் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.
இந்தா இவ்வளவு காசு என்று குமரன் கங்காவிடம் கொடுக்கையிலே அதனை சந்தோஷமாக வாங்கினால்தான் என்ன? எங்க போறீங்கள்? என்னதான் செய்கிறீங்கள்? என்று அன்பாகக் கேட்பதனை விட, அவனைக் கடித்துக் கொட்டினால், குமரனால் என்ன பதில்தான் சொல்லத்தான் முடியும்? பாவத்திற்காகப் பெத்து விட்டிருக்கு குமரனை.
குமரனைத் தாங்கிப் பிடிக்கின்றார்கள், விஜேயும், நெவீனும். இதுவே மிகவும் ஆதரவாக இருக்கின்றது குமரனுக்கு. இந்த ஆதரவில் 1% கூட கங்காவிடம் இருந்து வரவில்லை என்பதுதான் குமரனுக்குக் கவலை. அது மட்டுமா, தன்னில் ஒரு துளிகூட கங்காவிற்கு நம்பிக்கை இல்லை என்பதுதான் குமரனை மிகவும் தாழ்ந்த எண்ணத்திற்குத் தள்ளிச் சென்றதற்கான காரணம். அந்த negativeவான கங்காவின் commentகளையும் தாண்டி உற்சாகத்தோடு வேலையினைப் பார்த்துக் கொண்டிருக்கும் குமரனை வாழ்த்த வேண்டும் என்றுதான் தோன்றுகின்றது.
போட்டோக்களுக்கு நீங்கள் களைப்புடன் இருக்கக் கூடாதே என்பது காவேரியின் ஆதங்கம். ஆனால், அதனைப்பற்றி கங்காவுக்குக் கவலையே இல்லை. ஆனால், தன்னை விட கங்கா றொம்ப சந்தோஷமாக இருக்க வேண்டும், வடிவாக makeup செய்து நல்ல அழகாக இருக்க வேண்டும், ஆக மொத்தம் கங்காவின் ஆசை நிறைவேற வேண்டும் என்பதுதான் குமரனின் தீர்க்கமான முடிவு. ஆனால், குமரன் சந்தோஷமாகச் செய்தாலும், அவனின் மனம் வலிக்கின்றதை யார்தான் உணரப் போகின்றார்கள்?
கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் குமரனுக்கு ஏதும் சுகயீனம் வருமோ என்பது அவனின் கதைகளில் தெரிகின்றது.
எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!