posted 1st February 2026
இந்தப் பகுதி சீரியல் றிவூ and analysis ஆனது 27ஆம், 28ஆம் திகதிகளின் சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- முத்துமலரின் குடும்பம் பொலிஸால் கைது செய்யப்பட்டதினைத் தொடர்ந்து பசுபதியினதும் அவன் மகன் றாகவினதும் கோபமோ சாரதாவின் குடும்பத்தின் மேலே அதிகமாகியது.
- சாரதாவின் வீட்டில் உள்ளோர் தாக்கப்பட்டார்கள். கங்காவோ தள்ளி விடப்பட்டதினால் அவள் சுயநினைவினை இழந்தாள். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள்.
- ஆப்ரேஷனும் நடந்தது. பிள்ளையும், தாயும் காப்பாற்றப் பட்டார்கள்.
- றாகவாவைத் தேடி விஜயும், நெவீனும் அலைந்தார்கள். பொலிஸுக்கும் தண்ணி காட்டிக் கொண்டு ஒழித்து விளையாடும் றாகவ். ஆனால், விஜேயினதும், நெவீனினதும் கையில் அகப்பட்டான் றாகவ்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 27 - 28.01.2026
முத்துமலரின் குடும்பமானது சாரதாவின் குடும்பத்திற்கு முழுவதுமாகத் துரோகம் செய்ய முன்பே விஜேய், நெவீனுடன் சேர்ந்து பிடித்து விட்டான். அவர்களைப் பொலிஸிடமும் ஒப்படைத்து விட்டார்கள்.
முத்துமலரின் குடும்பத்தினை ஒருவாறாக அடக்கி விட்டோம் என்றிருக்கையிலே, இங்கு விஜேயின் தாத்தா வீட்டில் பசுபதியின் அடியாட்கள் வந்ததுமல்லாமல் அங்குள்ள பொருட்களைச் சேதமாக்கினார்கள். அதுமட்டுமல்லாமல், கங்காவை ஒரு கர்ப்பிணி என்று கூடப் பார்க்காமல் தள்ளியும் வி்ட்டார்கள். இதனால், கங்கா வயிறு அடிபட விழுந்தாள். நினைவிழந்தாள். கங்காவை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். அவவுக்கு ஆப்றேஷனும் நடந்தது. கவலையில் தோய்ந்திருந்த சாரதாவின் குடும்பத்திற்கு வாரிசு ஒன்று பிறந்தது. தாயும், சேயும் காப்பாற்றப் பட்டார்கள்.
இந்தக் கேவலமான வேலைகளுக்குச் சூத்திரதாரி பசுபதியைப் பிடிப்பதற்குப் பதிலாக, பசுபதியின் மகன் றாகவைத் தேடினான் விஜய். இதற்கு இப்போது மனம் மாறியுள்ள முன்னைய பசுபதிக்கு உடந்தையாக உள்ள விஜேயின் சித்தப்பா அன்பரசிடம் உதவி கேட்டான் விஜய். அவரின் உதவியுடனும், பொலிஸின் உதவியுடனும் றாகவ் தேடப்பட்டான்.
இதற்கு நெவீனும் விஜேயுக்கு மிகவும் உதவியாக இருந்தான். இருவரும் குடும்பத்தினை மிகவும் பாதுகாப்பாக இருக்கும் ஏற்பாடுகளைச் செய்துவி்ட்டு வெளி்க்கி்ட்டனர்.
பசுபதியோ ஒரு காலத்தில் சந்தானத்தின் மிகவும் நெருங்கிய நண்பன். சந்தானம், குடும்பத்தினைப் பிரிந்து வெளிநாட்டுக்குச் சென்று, உழைத்த பணம் அத்தனையையும் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டான் பசுபதி. ஆண் துணை இல்லாத சாரதா குடும்பமோ நடு றோட்டிற்கு வந்தது. அவர்களின் சொத்துக்களை எல்லாம் அபகரித்தான். அதுமட்டுமல்லாமல், ஊராரின் சொத்துக்களையும் தனதாக்கினான்.
காவேரியைப் பழி வாங்க வேண்டும் என்றுதான் அஜேயைக் காதலிப்பது போன்று நடித்து விஜேயின் வீட்டினுள் வந்தவள்தான் பசுபதியின் மகள் றாகினி. இப்போது அவளால் ஒன்றுமே செய்ய முடியாத நிலையினில் அஜேயை விட்டு விலகி விட்டாள். தன் மகன் அஜேயின் வாழ்க்கையானது தகப்பன் அன்பரசு போட்ட sketchஇனால் பிழைத்து விட்டதனை உணர்ந்தவராய், மனம் மாறிவிட்டார் போலும். இப்போது விஜேயின் வீட்டினிலே அடங்கி இருக்கின்றார், ஒருவிதமான கெட்ட வேலைகளும் செய்யாமல்.
இதுதான் திருந்துவதற்கு ஒரு காலம் என்பதா?
இப்படியாகத் திருந்தியிருந்த அன்பரசை விஜேயோ அல்லது காவேரியோ நம்பவில்லை. அவரும் கிறிஷ்ணாவைப் பற்றி அடித்துச் சொன்னார். அன்பின் மேலிருந்த நம்பிகையின்மை அவரை நம்ப விடவில்லை. இறுதியில், அன்பு சொன்னதுதான் சரியாகி விட்டது.
தாங்கள் செய்தனவெல்லாம் பிழை என்று விஜேயின் குடும்பத்தின் முன்னாலும், பொலிஸின் முன்னாலும் முத்துமலரின் குடும்பம் ஒத்துக் கொண்டதினால், பொலிஸ் அவர்களைக் கைது செய்தது. ஆனால், இதற்குப் பொறுப்பாக, பின்னணியாக இருந்த பசுவின் குடும்பத்தினை எப்படியாவது கண்டு பிடித்து பொலிஸில் ஒப்படைத்தால்தான் இதற்கு ஒரு முடிவு வரும் என்ற கோணத்தில் சிந்தித்த விஜய், நெவீனுடன் சேர்ந்து பசுபதியைத் தேடத் தொடங்கினான்.
பசுபதியைப் பிடிக்க வேண்டுமானால், அவனின் பிள்ளைகளைப் பிடிக்க வேண்டும். அதற்காக, றாகினியைப் பிடிக்கக் கூடாது. எனவே, றாகவ் தெரிவு செய்யப்பட்டான். அப்போது பசுபதி தானாக வந்து சரண்டைவான் என்பது விஜேயினதும், நெவீனினதும் திட்டமே. அதுமட்டுமல்லாமல், பசுபதியோ இப்போதுதான் ஜாமீனில் வந்துள்ளான். எனவேதான், பசுபதி தான் ஒதுங்கிக் கொண்டு தனது மகனாம் றாகவை வைத்து இந்த விளையாட்டினை ஆடுகின்றான்.
றாகவ் இப்போது விஜேயினதும், நெவீனினதும் கையில் அகப்பட்டான். அடித்துத் துவைத்தார்கள். இதனை கண்ட பொது மக்கள் றாகவின் மீது இரக்கம் கொண்டார்கள். ஆனால், விஜேய் அவர்களிடம் கேட்கும் கேள்வியாக என்ன இருக்கும்?
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!