posted 29th November 2025
இந்த Review & Analysisனில்;
- சந்தானத்தின் வாழ்க்கையால் சாரதா தன்னுயிரை மாய்த்துக் கொள்ள விளைந்தாலும், மகனாக இருந்த விஜேய் புத்துயிர் கொடுத்து காப்பாற்றினான்.
- சாரதாவின் குடும்பம் நொறுங்கிப் போனது.
- அன்பரசு போன்று உள்ளவர்கள் மற்றவர்களின் உயிரை எடுப்பதிலே கண்ணாக இருப்பார்கள்.
- ஊர், உலகம் மற்றவர்களின் மனதினைப் பார்க்காது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
மகாநதி - Mahanadhi - 20 & 21.11.2025
மகனாக நினைத்த விஜேய் தனது கடமையினைச் சரிவரச் செய்வதையிட்டு சந்தோஷம் கொண்டு மனத்தினை மாற்றிக் கொண்ட சாரதா.
சாரதா பயந்தது போல விஜேயின் வீ்ட்டில் கச்சேரி தொடங்கியது. விஜேய் காவேரியுடன் சேர்ந்து நின்றாலும் பெண்கள் எப்படா ஏதாவதொரு துருப்புக் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டிருப்வர்களுக்கு அவல் கிடைத்து விட்டது. காவேரியின் குடும்பத்தினைக் கேவலமாகக் கதைத்தார்கள்.
வீறாப்போடு நிற்கும் காவேரி கூனிக் குறிகிப் போனாள். இங்கு அன்பரசைக் கண்டதும் அவர்களது மனதினில் ஏதோ வில்லங்கம் வீடு தேடி வந்து விட்டதே என்று மனத்தினைத் திடப்படுத்தியவர்களாய் காலை உள்ளே வைத்து வந்தார்கள். ஆனால், விஜேயும், காவேரியும் எதிர்பார்த்ததினை விட நேரில் கண்டது போன்று எல்லாவற்றினையும் சொன்னார்கள் விஜேயின் வீட்டார்.
காவேரியின் கேள்வி இதனை இவ்வளவு சீக்கிரமாக யார் சொல்லி இருப்பார்கள் என்பதுதான்? அப்பவே விஜேயின் சந்தேகம் பசுபதி மேல்தான். அது இப்போ இங்கு உண்மையாகி விட்டது. அப்போ பசுபதிதான் இந்தக் கதைக்கு கதை ஆசிரியர் என்று முக்கால் பங்கு சரியாகி விட்டது. பசுபதி அண்ணனின் துப்பு அங்கு கட்டார் குடும்பத்தினால் வெளிவந்தது. இங்கு அன்பினால் வெளிவந்துள்ளது கட்டார் கதையினை உறுதிப் படுத்துவதற்கு.
ஆனால், குமரனிடம் சந்தானம் சொன்னது, இதே குடும்பத்தைத்தானே. இதே குடும்பத்திற்குத்தானே ஒரு சில பொருட்கள் வாங்கி பார்சல் பண்ணும்படியாகச் சந்தானம் சொல்லி, குமரனும் செய்திருக்கின்றான். அப்படி சந்தானம் சொன்னதினை குமரன் மறைத்தது சாரதாவிற்கும், அவளின் குடும்பம், கங்கா எல்லாருக்கும் குமரன் செய்த மன்னிக்க முடியாத துரோகமே!
அப்போ இப்படியான உண்மையினை சந்தானம் குமரனுக்குச் சொன்னதினால் இந்தக் கதை உண்மையாகத்தான் இருக்குமோ?
சாரதா உடைந்து போனா. பாட்டி நொருங்கிப் போனா. இப்படியான கேவலங்கெட்ட துரோகத்தினை யார்தான் மன்னிப்பார்கள். மறப்பார்கள். உண்மையான ஒரு மனைவியால் இப்படியான வாழ்க்கை இந்த ஆளுடன் வாழ்ந்தோமே என்று அவளின் உடம்பு கூசாது. அருவருப்பாக இருக்காது?
இன்று விஜேயின் வீட்டில் கதைக்கப்பட்டது, அதுவும் அன்பு மூலமாக வந்த இந்தச் செய்தியானது அயல் வீடுகளுக்கும், உறவுகளுக்கும் பரவாதென்று என்னதான் நிட்சயம்?
இதனை விஜயையிடமும் கேட்பார்கள் உற்றார், உறவினர்கள். காவேரியை ஒருமாதிரியாகப் பார்ப்பார்கள். இனி, காவேரிக்குப் பிறக்கும் குழந்தைக்கு என்ன ஆகுமோ! எப்பதான் சாட்டு கிடைக்கும் என்று இருந்த விஜேயின் பாட்டிக்கு, அப்படி இப்படி என்று இடக்கு முடக்காக காவேரியுடன் கதைக்கும் பாட்டி, பிள்ளை பிறந்ததும், பிள்ளையினை விட்டு விட்டுப் போ காவேரி என்று பாட்டி சொல்ல மாட்டா என்று ஒரு உறுதியும் கொடுக்க முடியாதல்லவா.
இன்னமுன் ஜமூனாவின் வீட்டிலிருந்து மாமியாரின் கதை வரவில்லை. இனி வந்து விடும்.
சாரதாவின் மைதினியைக் காணவில்லை. அதுதான், கங்காவின் மாமியார், சந்தானத்தின் அக்கா. இவ என்ன சொல்லப் போகின்றாவோ? என்னவெல்லாம் சாரதாவிட்டே வாங்கிக் கட்டப் போகின்றாவோ?
இதெல்லாம், கடந்து போகும் என்று சாரதாவிடம் சொன்ன விஜேய். உண்மைதான். ஆனால், ஊர், தடுப்பூசி போடுவது போல இந்தக் கதைக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருப்பார்களே. அத்துடன், மேலும் அதனை வீரியமாக்கிக் கொண்டிருப்பார்களே!
உங்கள் கருத்துக்கள் என்னென்ன என்று கூறுங்கள்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!