
posted 25th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
97ஆவது வயதில் ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் காலமானார்
வடமராட்சி கிழக்கு வத்திராயனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆழியவளை சி.சி.த.க. வித்தியாலயத்தில் நீண்டகாலமாக ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றிய முத்தர் சிற்றம்பலம் (வாத்தியார் ) அவர்கள் நேற்று முன்தினம் 24.03.2024 இறைவனடி சேர்ந்தார்.
தன்னுடைய 97 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்த யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தின் அதிபருடைய இறுதிக்கிரியை நேற்று அவரது இல்லத்தில் இடம்பெற்றது
வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் பல அரச உத்தியோகத்தர்களையும், அதிக கல்விமான்களையும் உருவாக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)