
posted 13th October 2021
பருத்திததுறை சக்கோட்டை கடல் பகுதியில் வைத்து35கிலோ கஞ்சாப்பொதிகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
பருத்தித்துறை ப் போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து இன்று (13.10.2021) அதிகாலை 4மணியளவில் சக்கோட்டை கடல் பகுதிக்கு போலிசார் சென்று தேடுதல் நடத்தினார்கள்.
அதன் போது கைவிடப்பட்ட படகு ஒன்றிலிருந்து 35கிலோவுக்கு அதிகமான நிறை கொண்ட கஞ்சாப்பொதிகளைக் கைப்பற்றினார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை

எஸ் தில்லைநாதன்