23 இந்திய மீனவர்களை சிறை மாற்ற அனுமதி கிடைத்து

இந்திய மீனவர்கள் 23 பேரையும் யாழ் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கும் அவர்களிடம் விசாரணை செய்து வாக்கு மூலத்தைப் பெறுவதற்கும் அனுமதி வழங்குமாறு, யாழ் நீரியல்வளத் துறை அதிகாரிகாளால் பருத்தித்துறை நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் மூலம் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு, பருத்தித்துறை நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை நேற்று வெள்ளிக்கிழமை (29) அனுமதி வழங்கினார்.

கடந்த 14 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேருக்குமான வழக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை (28) பருத்தித்துறை நீதிமன்றில் இடம்பெற்ற போது அவர்களை கரைநகர் கடற்படை முகாமில் அடுத்தமாதம் 11 ஆம் திகதி வரை தொடந்து தடுத்து வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.

நேற்றைய(29) வழக்கில் இந்திய துணைத்தூதரகம் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி மீனவர்களை தூதரக அதிகாரிகள் சந்திப்பதற்கும், அவர்களுக்கான உடைகளை வழங்கவும், தூதரகத்தின் அனுசரணையுடன் தாயகத்தில் உள்ள உறவினர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள அனுமதி வழங்குமாறும் மன்றை கோரினார்.

இதற்கு தூதரக அதிகாரிகளினதும், உறவினர்களது விபரங்களையும் எதிர்வரும் 1ம் திகதி மன்றில் சமர்ப்பிற்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

23 இந்திய மீனவர்களை சிறை மாற்ற அனுமதி கிடைத்து

எஸ் தில்லைநாதன்