
posted 12th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
13 பதக்கங்களை வென்று தேசிய மட்டத்துக்கு தெரிவு
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரி மாணவர்கள் கிழக்கு மாகாண மட்ட கராத்தே போட்டியில் வெற்றிபெற்று தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர்.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட கராத்தே போட்டிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரி மாணவர்கள் 2 தங்கப் பதக்கங்களையும், 08 வெள்ளிப் பதக்கங்களையும், 03 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று கல்முனை வலயத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளதோடு, தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட கராத்தே போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், அவர்களைப் பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் எஸ். பாலுராஜூக்கும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)