
posted 19th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வெளியான வர்த்தமானியால் தேர்தலுக்கு தடை ஏற்படாது - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்
22ஆம் திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தலுக்கு அது எந்தத் தடையையும் ஏற்படுத்தாது என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் எந்தவிதமான தாக்கத்தையும் செலுத்தாது என்று இன்று (19) வெள்ளிக்கிழமை பதுளையில் வைத்து அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்புக்காக எந்தவிதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)