
posted 28th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வெடுக்குநாறிமலை சிவன் ஆலய பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை (26) வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு கிராம சேவையாளர் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் மதிமுகராசா பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் வவுனியா அலுவலகத்துக்கு சென்றிருந்தார்.
அங்கு கடும் விசாரணைகள் இடம் பெற்றதோடு வெடுக்குநாறிமலை ஆலயம் தொடர்பான பல்வேறு விடயங்களும் அவரிடம் வினவப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாட்டின்போது பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களில் ஆலய பூசகரும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)