வெடிவைத்து இளைஞனைக் கொன்ற பிக்கு

இளைஞனுக்கும் - பிக்குவுக்கும் ஏற்பட்ட தகராறில், யானைகளை விரட்டப் பயன்படும் வெடியை பிக்கு இளைஞனின் வயிற்றில் வைத்து கட்டியணைத்தவாறு வெடிக்கச் செய்தார். இதில் இளைஞன் உயிரிழக்க பிக்கு காயமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைதான ஓமனியாமடு விகாராதிபதியை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தச் சம்பவம் கடந்த இரண்டாம் திகதி மட்டக்களப்பு - வாழைச்சேனை - ஓமனியாமடுவில் இடம்பெற்றது.

ஓமனியாமடு விகாரதிபதிக்கும் அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, விகாராதிபதி, யானைவெடியைக் கொளுத்தி, அதனை ஓர் இளைஞனின் வயிற்றில் வைத்துக் கட்டிப்பிடித்து வெடிக்க செய்தார்.

இதில், இளைஞர் உயிரிழக்க பிக்கு காயமடைந்தார். இந்த சம்பவத்தில் 27 வயதான ஹேரத் முதியன்செலாகே சிசிர குமார என்பவரே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெடிவைத்து இளைஞனைக் கொன்ற பிக்கு

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House