
posted 9th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
விபத்தில் காயமடைந்த முதியவர் உயிரிழப்பு
கூலர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் அது பலனின்றி உயிரிழந்தார்.
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் கடந்த புதன்கிழமை (07) இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவாது,
பாடசாலையிலிருந்து தனது பேரனை ஏற்றிக்கொண்டு சைக்கிளில் சென்றவரை அதிவேகமாக பயணித்த கூலர் வாகனம் மோதியது.
இதில், சைக்கிளில் சென்ற இருவரும் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
படுகாயமடைந்த 67 வயதான முதியவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (07) உயிரிழந்தார்.
கூலர் வாகனத்தின் சாரதியை கைது செய்த மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)