
posted 5th October 2022
நிந்தவூர் அட்டப்பள்ளம் சிறீசிங்காரபுரமாரியம்மன் ஆலயத்தில் வருடாந்த நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் 26ஆம் திகதி ஆரம்பமான நவராத்திரி விழா ஒன்பது நாள் திருவிழாவுடன் விஜயதசமியான இன்று தீமிதிப்புடன் நிறைவுபெற்றது.
இதேவேளை திருவிழாவின் சிறப்பு அம்சமாக நேற்று மாலை பக்தர்களின் காவடி ஊர்வலத்துடன் பெண்கள் கற்பூர தீச்சட்டிகளுடனும் ஊர்வலமாக ஆலயத்திற்கு வருகைதந்தனர்.
இம்முறை இந்த வருடாந்த நவராத்திரி திருவிழாவில் பெருந்தொகையான பக்தர்கள் தினமும் வருகை தந்து கலந்து கொண்டு சிறப்பித்ததாக ஆலய பிரதம தர்மகர்த்தா ரீ. கோபாலன் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY