
posted 24th September 2021
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடிப் அடிப்பகுதியில் மின்னல் தாக்கியது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை(23) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இடைக்காடு வெற்றிலைக்கேணி சேர்ந்த குயின்ரன் உமேஸ் (வயது- 35) என்பவர் உயிரிழந்ததுடன், கட்டை காட்டைச் சேர்ந்த ஸ்ரானிலேல் ஜெயக்குமார் (வயது-45) என்பவர் படுகாயங்களுக்கு உள்ளானார்.
நேற்று(23) பிற்பகல் அப்பகுதியில் மழை பொழிந்ததாகவும் அச்சமயம வெற்றிலைக்கேணி கோரியடிப் பகுதியிலுள்ள வாடியில் நின்றிருந்த மீனவர்கள் மீது மின்னல் தாக்கியதாகவும தெரிவிக்கப்படுகிறது.

எஸ் தில்லைநாதன்