மர்ம நபர்களின் அட்டகாசம் அரியாலையில்

அரியாலையில் வீடொன்றை பெற்றோல் ஊற்றி எரிக்க முற்பட்ட மர்ம நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிிிமை அதிகாலை 2 மணியளவில் மதில் ஏறி குதித்து வீட்டுக்குள் நுழைந்த மூன்று மர்ம நபர்கள், வீட்டில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுள்ளனர். இதில் வீட்டு சுவர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

அந்த மர்ம நபர்களை அடையாளம் காண சி.சி.ரி.வி. கமரா பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மர்ம நபர்களின் அட்டகாசம் அரியாலையில்

எஸ் தில்லைநாதன்