
posted 3rd March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நோர்வே நாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் உதவிக்கரத்தால் 12 வருடங்களாக ஒரு ஓலைக்குடிசையில் வசித்து வந்த குடும்பத்தின் வீட்டை புணரமைப்பு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அச்சங்குளம் கிராமத்தில் ஒரு குடும்பம் 12 வருடங்களாக ஓலைக் குடிசையில் வசித்து வந்தது.
இக் குடிசையானது மழைக் காலங்களில் ஈடுகொடுக்க முடியாத ஒரு குடிசையாக காணப்பட்டதைத் தொடர்ந்து மன்னார் ரோட்டரிக் கழகம் இவற்றை இனம் கண்டு நோர்வே நாட்டில் வசிக்கும் ஐPவகாந்த என்பவரின் நிதியைக் கொண்டு இக் குடும்பத்தார் வசிக்கும் குடிசை புணருத்தானம் செய்து கொடுக்கப்பட்டது.
அதாவது இக் குடிசையின் கூரையிக்கு சீற்றுக்கள் இடப்பட்டு புணருத்தானம் செய்து கொடுக்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)