
posted 9th March 2022
கல்முனை அல்.-பஹ்றியா தேசியப் பாடசாலையின் கல்விச் சமூகம் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ. எம். றியாஸிடம்(பெஸ்டர் றியாஸ்) பாடசாலை தேவைகள் குறித்துது விடுத்த கோரிக்கைக்கு அமைய அவர் நீதி அமைச்சர் அலி சப்றியின் கவனத்திற்கு எத்தி வைத்து அமைச்சரின் வரவு செலவுத் திட்ட நிதியில் இருந்து இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான அலுவலக பாவனைக்கான பொருட்களை 08.03.2022 பாடசாலைக்குச் சென்று அதிபர் எம். எஸ். எம்.பைசாலிடம் கையளித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் திருமதி. பஷீறா றியாஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்த முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும். சமூக செயற்பாட்டாளருமான ஏ. எம். றியாஸ் பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House