posted 17th April 2023
அன்னாரின் இழப்பினால் கவலையில் ஆழ்ந்த அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்துள்ள அனுதாபங்கள்
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நீரில் மூழ்கி மரணம்
மட்டக்களப்பு - சந்திவெளி ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திவெளி, வட்டையார் வீதியைச் 43 வயதுடைய கந்தையா பவானந்தன் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
மீன்பிடிக்க சென்றவரைக் காணவில்லை என்று அவரது பிள்ளைகள் தோணியொன்றில் சென்று தேடியபோது இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தோணியிலிருந்து வலை வீசும் போது தவறி விழுந்து வலைக்குள் சிக்குண்டு அதிலிருந்து மீளமுடியாமல் நீரில் மூழ்கி மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிள்ளைகள் இருவரும் தந்தையின் சடலத்தை கரைக்கு கொண்டுவந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பிரேத பரிசோனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)