
posted 21st August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நாம் எந்த அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்ற தயார்
இலங்கை மக்கள் தெரிவுசெய்யும் எந்த அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயார் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
கண்டியில் பௌத்தமத தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை மக்களின் தெரிவுகளை மதிப்பது குறித்த இந்தியாவின் உறுதிப்பாட்டையும், இரண்டு நாடுகளில் எவர் ஆட்சி செய்தாலும் வலுவான இரு தரப்பு உறவுகளை பேணுவது குறித்த உறுதிப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கை மக்களே தெரிவு செய்யவேண்டியவர்கள்.இலங்கை தீர்மானிக்கும். இலங்கை மக்கள் தீர்மானிக்கும் எதனையும் நாங்கள் மதிப்போம்.
இலங்கை மக்கள் தெரிவுசெய்யும் எந்த அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றுவோம். எங்கள் நட்பு என்பது அனைத்து இலங்கைக்கும், அனைத்து இலங்கையர்களுக்குமானது.
இலங்கையையும், இந்தியாவையும் இணைக்கும் பாலம் குறித்து கருத்து வெளியிட்ட அவர். இதற்கு சில காலம் எடுக்கும். இது நீண்ட திட்டம். ஓரிருவருட திட்டம் இல்லை. எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கூறமுடியாது. 5 அல்லது 6 வருடங்கள் நீடிக்கலாம். இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவதிலேயே இது தங்கியுள்ளது. இதனை பரஸ்பர இணக்கப்பாடு புரிந்துணர்வுடனேயே முன்னெடுப்போம் என்றார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)