Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

தமிழரின் வாக்குகளைப்பற்றி நீலிக்கண்ணீருடன் அரசியல்வாதி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கின்றனர். எனவே தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக தீர்மானம் எடுக்கவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், “தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக தீர்மானம் எடுக்கவேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கப்படுகின்றன.

அரசியல் கட்சிகள் பொது மக்களின் வாக்குகளைத் தமது தேவைக்கு பயன்படுத்துகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து மக்களும் விரும்பும் ஒருவரையே வேட்பாளராக நிறுத்துவோம்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் பெரும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும், ஆட்சி மாற்றத்தால் ஏனைய சில அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்க முடியாமல் போனது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இலங்கை முழுவதும் அந்த அபிவிருத்தி முடக்கப்பட்டதுடன் அந்த ஆட்சி காலத்தில்தான் இலங்கையின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.

இதற்கான அவப்பெயர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டது. கேட்டாபய ராஜபக்ஷ ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் அந்த சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

எங்களின் ஆட்சி இடைநடுவில் மாற்றப்பட்டதுடன், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்திருந்தோம். எவ்வாறாயினும், தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” என்றார்.

Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)