
posted 2nd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு த.தே.ம. முன்னணியால் பிரச்சாரம்
நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கோரி இன்றையதினம் (02) வெள்ளிக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியிலும், நகர்ப்புறப் பகுதியிலும் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)