சுமணரத்ன தேரர் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச  செயலாளரின் அறையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டார்

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதன்காரணமாக இன்று திங்கட்கிழமை பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கின.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வன இலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு கோரியதாகவும், அதனை வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லையென பிரதேச செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்தே இந்த போராட்டத்தை பிக்கு முன்னெடுத்தார்.
பிரதேச செயலாளரையும் ஊழியர்களையும் அச்சுறுத்தும் வகையில் அவர் போராட்டம் நடத்தினார் என்றும், பொலிஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

சுமணரத்ன தேரர் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச  செயலாளரின் அறையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டார்

எஸ் தில்லைநாதன்

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More