
posted 3rd April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கௌரவிக்கப்பட்டனர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஸாட் பதியுதீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் ஆகியோர் நிந்தவூரில் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வு நிந்தவூர் மக்கள் காங்கிரஸ் செயற்குழுவின் ஏற்பாட்டில் நிந்தவூர் அழகாபுரி விடுதியில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் நிந்தவூர் மத்திய குழு உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களென பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)