கொவிட் தடுப்பூசி

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள பல பிரதேசங்களிலும், கொவிட் - தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சித் திட்டம் இடம்பெறவுள்ளளன.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.ஜீ. சுகுணனின் வழிகாட்டலில் நாளை 20 ஆம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி ஏற்றல் நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.

இதன்படி வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், நாளை 20ஆம் திகதி உன்னிச்சை 8 ஆம் மைல்கல், அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, நெடியமடு தாய்சேய் நல சிகிச்சை நிலையம், வவுண தீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்றில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை கொவிட் தடுப்பூசி ஏற்றல் இடம்பெறும்.

அதேபோல் 21 ஆம் திகதி பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயம், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், எதிர்வரும் 22 ஆம் திகதி ஆயித்திய மலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்றிலும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் தடுப்பூசி ஏற்றல் நிகழ்வு இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளைபட்டிப்பளை கொவிட் தடுப்பு செயலணியின் ஏற்பாட்டிலும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டுதலிலும் எதிர்வரும் 21 திகதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை, கொக்கட்டிச்சோலை பேருந்து நிலையத்தில் மாபெரும் கொவிட் தடுப்பூசி ஏற்றல் நிகழ்வு இடம்பெறவுமுள்ளது.

பொது மக்கள் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாது குறித்த நிலையங்களில் கொவிட் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். சுகுணன் வலியுறுத்திக் கோரியுள்ளார்.

கொவிட் தடுப்பூசி

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House