
posted 29th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
குருக்களிடம் கொள்ளை
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மாரி அம்மன் கோவிலின் குருக்களிடம், பொலிஸார் எனக் கூறி கொள்ளையிட்ட நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
69 வயதான குருக்கள் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது, அவரது மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்ற இருவர், தாங்கள் பொலிஸார் என்று கூறி அவரை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
அவரிடம் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, பையில் இருந்த ரூ.110,000 ரொக்கம் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் கொள்ளையடித்துவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர்.
குருக்கள் பழுகாமத்தில் வசிப்பவர். குருக்கள் மூலம் கிடைத்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)