
posted 3rd January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கிளிநொச்சி, முல்லைத்தீவில் 100 குடும்பங்களுக்கு உலருணவு
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் 100 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி நிலையம், சுழிபுரம் றோட்டரக்ட் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 100 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியா ரென் போர் தமிழ் அமைப்பின் இரண்டு இலட்சம் ரூபாய் நிதி அனுசரணையில் குறித்த உலருணவு பொதிகள் வழங்கப்பட்டன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி உதயநகர் மேற்கில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் முல்லைத்தீவு மன்னாகண்டல் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
உலருணவுகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி நிலைய உறுப்பினர்கள், சுழிபுரம் றோட்டரக்ட் கழக உறுப்பினர்கள், கிராம சேவகர்கள், பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)