
posted 4th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.முரளீதரன்
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய றூபவதி கேதீஸ்வரன் ஓய்வு பெற்ற நிலையில் மேலதிக அரசாங்க அதிபராக பணியாற்றி வந்த எஸ்.முரளீதரன் அரசாங்க அதிபராக பொறுப்பேற்கின்றார்.
இந்த நிலையில் நேற்று (03.07.2024) பிரதமர் தினேஷ் குணவர்த்தன அரச அதிபர் நியமனத்தினை வழங்கியிருந்தார்.
புதிய நியமனம் பெற்று கடமைகளை பொறுப்பேற்க வருகை தந்த புதிய அரசாங்க அதிபருக்கு, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும், சிவில் அமைப்பினரும் இணைத்து பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் வரவேற்பளித்தார்கள். இதனைத் தொடர்ந்து அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)