
posted 19th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஐக்கிய தேசிய கட்சியுடன் கருணா விசேட சந்திப்பு
கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் ஐ.தே.கட்சியின் முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்சம் தலைமையிலான குழுவினருக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று முன் தினம் புதன்கிழமை (17) இடம்பெற்றது.
நேற்று முன் தினம் புதன்கிழமை மாலை 3 மணியளவில் சிறிகோத்தாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவின் அழைப்பை ஏற்று, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் கருணா அம்மான் தலைமையில், உபதலைவர் ஜெயா சரவணா மற்றும் செயலாளர் செந்தூரன் ஆகியோர், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசத்துடன் முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலில் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விரிவாக பேசப்பட்டதாக தெரியவருகிறது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)