எதிர்ப்பை வெளிக்காட்ட எரிக்கப்பட்டன பதாதைகள்

பிரதமரை வரவேற்கக் கட்டப்பட்டிருந்த பதாதைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இருநாள் பயணமாக யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பொருளாதார மத்திய நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக மட்டுவிலுக்கு வந்திருந்தார்.

அவரின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று போராட்டத்தை முன்னெடுக்க முயன்றனர். ஆனால், அவர்களை பொருளாதார மத்திய நிலையப் பகுதிக்கு செல்ல விடாமல் வண்ணாத்திப் பாலம் அருகே பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து சென்ற பின்னர் போராட்டக்காரர்களை அங்கு செல்ல பொலிஸார் அனுமதித்தனர்.

இந்த நிலையில், அங்கு சென்ற போராட்டக்கார்கள் பிரதமரை வரவேற்கக் கட்டப்பட்டிருந்த பதாதைகளை அறுத்த போராட்டக்காரர்கள் அவற்றை தீ மூட்டி எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

எதிர்ப்பை வெளிக்காட்ட எரிக்கப்பட்டன பதாதைகள்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House