
posted 17th September 2022
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப் பகுதியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 அரசியல் கைதிகள் தம்மை நீதிமன்றத்தில் முற்படுத்தாது, விசாரணைகளை மேற்கொள்ளாது, தொடர்ச்சியாக தடுத்து வைத்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குறித்த 12 அரசியல் கைதிகளின் உறவினர்களும் வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY