posted 30th September 2021
இந்தியாவிலிருந்து வடமராட்சிக்கு கடத்திவரப்பட்ட 217 கிலோ கிராம் மஞ்சளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு வெளி இடங்களிற்கு ஏற்றிச் செல்ல முற்பட்ட 217 கிலோ கிராம் மஞ்சள் இன்று வியாழக்கிழமை(30) வல்வெட்டித்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை கடத்திச் சென்ற மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்