
posted 8th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அராலியில் இளைஞர்கள் மீது தாக்குதல்
வட்டுக்கோட்டை அராலி ஆலடி சந்திக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் நின்ற இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று நேற்றிரவு புதன் (07) இரவு தாக்குதல் நடாத்தியுள்ளது.
குறித்த குழுவுக்கும் அவ்விடத்தில் நின்ற இளைஞர்களுக்கும் ஏற்கனவே உள்ள முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
தாக்குதல்களுக்கு உள்ளாகியவர்களில் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)