அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டம் - யாழ் பல்கலைக்கழக ஊழியர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இன்று வியாழக்கிழமை அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டமொன்று இடம்பெற்றது.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கமைய நீண்டகாலமாக நிலவிவரும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு மற்றும் ஏனைய பிரச்னைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டம் நேற்று இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.

இதனொரு கட்டமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலிலும் நேற்று நண்பகல் 12 மணியளவில் இந்த போராட்டம் இடம்பெற்றது.
கல்விசாரா ஊழியர்களின் பிரச்னைக்கு உடனடியாக தீர்வை வழங்கு, சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் குழுவின் அறிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்து போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஊழியர்கள் தாங்கியிருந்தனர்.

அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டம் - யாழ் பல்கலைக்கழக ஊழியர்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House