கல்முனை வலயம் முதலிடம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

கல்முனை வலயம் முதலிடம்

தமிழ் மொழித் தினப் போடடிகளில் கல்முனை கல்வி மாவட்டத்தில் கல்முனை கல்வி வலயம் முதலிடம் பெற்றுள்ளது.

கல்வி வலயத்திலிருந்து 14 போட்டிகள் மாகாணப் போட்டிக்கென தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 36 அரங்கப் போட்டிகளில் 14 முதலிடங்களை கல்முனை கல்வி வலயம் பெற்று முதலிடத்தினைப் பெற்றுள்ளது. இதன்படி,

1. ஆக்கத்திறன் வெளிப்பாடு - நிந்தவூர் அஸ்-ஸபா வித்தியாலயம் - எஸ்.எச். அம்மார்-பிரிவு 1
2. பேச்சு - மருதமுனை அல் - ஹம்றா மகா வித்தியாலயம் - அப்துல் சமட் ஹயானி - பிரிவு 4
3. பாவோதல் - நிந்தவூர் அஸ் - ஸபா வித்தியாலயம் - ஏ.எச். ஹனீப் முகம்மட் - பிரிவு 1
4. பாவோதல் - கார்மேல் பற்றிமா கல்லூரி - அ. தேஷ்மி - பிரிவு 3
5. பாவோதல் - கார்மேல் பற்றிமா கல்லூரி - யு. அபர்ண சுவேர்தா - பிரிவு - 4
6. இசை - தனி - ஆர்.கே.எம். மகா வித்தியாலயம் - சு.வேகாத்மி - பிரிவு 2
7. இசைக் குழு 1, கார்மேல் பற்றிமா கல்லூரி, செ. லக்ஸ்விகா, க. வகஸ்தமி, சி. கேதுஜா, செ. லபோனிகா, பா. போட்சனா, சி. அபிரக்ஸினி
8. நடனம் - தனி - சு. அகஸ்ரி, கார்மேல் பற்றிமா கல்லூரி, பிரிவு 3
9. நடனம் - குழு - 1 பற்றிமா கல்லூரி
10. நாட்டிய நாடகம் - பற்றிமா கல்லூரி
11. வில்லுப்பாட்டு - பற்றிமா கல்லூரி
12. தமிழறிவு வினாவிடை- நிந்தவூர் அல் - அஷ்ரக் ம.ம.வி
13. முஸ்லிம் நிகழ்ச்சி - நிந்தவூர் அல் - அஷ்ரக் ம.ம.வி
14. நவீன நாட்டுக்கூத்து - காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம்

என்பன தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இப்போட்டிகளின் படி திருக்கோவில் வலயம் 10 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தினைப் பெற்றுள்ளதுடன் தலா 6 இடங்களைப் பெற்று அக்கரைப்பற்று, சம்மாந்துறை வலயங்கள் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளன.

எதிரவரும் 26ஆம் திகதி திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் மாகாண மட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

கல்முனை கல்வி வலயத்திற்கான தமிழ் மொழித் தினப் போட்டிகளின் தலைவராக இருந்து வழி நடத்திய வலயக் கலவிப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் அவர்களுக்கு தமிழ் மொழிப் பிரிவின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன்,

தமிழ் மொழித் தினக் குழுவின் ஆலோசகர் - உதவிக் கல்லிப் பணிப்பாளர் யூ.எல். றியால், செயலாளர் - வளவாளர் ஜெஸ்மி எம். மூஸா, இணைப்பாளர் க. குணசேகரம் ஆகியோருக்கும் மாணவர் தயார்படுத்தலில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர் பெருந்தகைகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை வலயம் முதலிடம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)