மேம்பாட்டுக்கூடல் நிகழ்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களது ஆற்றல்களை வளர்க்கவும் நோக்காகக் கொண்டு முன்னெடுத்துவரும் இளம் எழுத்தாளர்களின் மேம்பாட்டுக்கூடல் நிகழ்வு ஒன்று அக்கரைப்பற்றில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரண்யா சுதர்சனின் ஆலோசனைக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி கூடல் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட கலாச்சார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். தமீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

நிகழ்வில் எழுத்தாளரும், பேஜஸ் புத்தக இல்லத்தின் அதிபருமான சிராஜ் மஸ்ஹுர் பிரதம வளவாளராகக் கலந்து கொண்டதுடன் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்கள் பலரும் இளம் எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர்.
வளர்ந்துவரும் இளம் எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களில் முரண்பாடற்ற தன்மையைப் பேணல், எழுத்தாக்க முறைகள், நுணுக்கங்கள், எழுதுவதிலுள்ள தாற்பரியங்கள் என்ற தலைப்புக்களில் விளக்க உரைகளும் நிகழ்வில் இடம்பெற்றன.

மேம்பாட்டுக்கூடல் நிகழ்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY