பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயற்பாட்டை மேற்கொள்கிறது சீனா -  சிறீதரன் எம்.பி! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையும் அதனை அடைவதற்கான பகடைக்காய்களாக ஈழத் தமிழர்களையும் பயன்படுத்த நினைக்கிறது சீனா. இனப்பிரச்சனைக்கு தீர்வு ஒன்று பெற்றுத் தரவேண்டும் என்ற எண்ணத்தை ஒரு போதும் சீனா கொண்டிருக்கவில்லை.

இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் ஆற்றிய பாராளுமன்ற உரையில் இலங்கைக்கு கூட்டுறவு சமஸ்டி முறையில் தீர்வு காண்பது சிறந்தது என்ற தீர்க்க தரிசனமான உரையினை ஆற்றி இருந்தார். இதன் மூலம் உணர்த்துவது என்னவெனில் ஈழத் தமிழர்களுக்கான இனப் பிரச்சனைக்கான தீர்வை வழங்குவதாக இருந்தால் அது இந்தியா ஒன்றினாலேயே முடியும் என அவரது உரை வெளிச்சம் இட்டு காட்டுகின்றது. ஆகவே இந்திய பிராந்திய வல்லரசின் அனுசரனையின்றி தமிழர்களுக்கு ஒரு போதும் தீர்வு எட்டப்படாது என்பது நிதர்சனமான உண்மை.

கரைச்சி பிரதேச சபையின் பண்பாடு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வாழ்த்து தெரிவித்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயற்பாட்டை மேற்கொள்கிறது சீனா -  சிறீதரன் எம்.பி! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY