காலநிலை மாற்றத்தால் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 10 ஆயிரத்து 320 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் ஒரு வீடு முழுமையாகவும், 112 வீடுகள் பகுதியளவிலும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தற்போது 4 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 47 குடும்பங்களை சேர்ந்த 164 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறியிடத்தக்கது.
.

காலநிலை மாற்றத்தால் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்