1919 நாளாக உறவுகளைத் தேடும் உரிமைப் போராட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
1919 நாளாக உறவுகளைத் தேடும் உரிமைப் போராட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

1919 நாளாக உறவுகளைத் தேடும் உரிமைப் போராட்டம்

கர்மா தமிழ் அரசியல்வாதிகளையும் விடாது என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர்ச்சியான போராட்டம் நேற்று திங்கட்கிழமையுடன் 1919ஆவது நாளை எட்டியது. இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் வாரத்தை ஒட்டி பேசியபோதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தை அகற்றுமாறு சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்தது. இது தமிழ் மக்களின் பிரதான கோரிக்கை. மக்கள் பிரதிநிதிகள் சிவில் அமைப்புகள் இந்த கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும்.

ஐ. நா. கூட்டத் தொடருக்கு முன்பு இலங்கைக்கு உதவிகள் வழங்கும் அமெரிக்க, ஜரோப்பிய நாடுகளிடம் வலுவான கோரிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள் சிவில் அமைப்புக்கள் முன்வைக்கவேண்டும். இல்லாவிடின் கர்மா அனைவரையும் பாதிக்கும்.

சிங்கள அரசியல் வாதிகள் பதவிக்கு வந்ததும் இனவாதிகளாக பேசுவார்கள். இதுதான் 74 வருட தமிழர்களின் வரலாறு.

நல்லிணக்கம் மற்றும் தெற்கு அரசியல் பற்றி பேசும் தமிழ் அரசியல்வாதிகள் இனப்படுகொலைக்கான நீதியை பெறமுடியாது, என்றனர்.

1919 நாளாக உறவுகளைத் தேடும் உரிமைப் போராட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY