Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

யாழ்ப்பாணத்தில் மட்டும் ஆகக்கூடுதலான டெங்கு நோயாளர்கள்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 3,930 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் ஜூன் மாதத்தின் முதல் 11 நாட்களில் மாத்திரம் 971 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 25 ஆயிரத்து 891 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 9 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களின் எண்ணிக்கை 5,624 ஆகும்.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3,930 டெங்கு நோயாளர்களும் கம்பஹாவில் 2,487 டெங்கு நோயாளர்களும் கண்டியில் 1,986 டெங்கு நோயாளர்களும் இரத்தினபுரியில் 1,441 டெங்கு நோயாளர்களும் களுத்துறையில் 1,372 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)