“உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்பது இதுதானா? | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

1990 ஆம் ஆண்டுக்கு முன் இனப்பிரச்சனை தலைதூக்கிய காலத்தில் யாழ் பகுதியைச் சார்ந்த அமரர் நாகமணி இராசையா தனது குடும்பத்துடன் புலம்பெயர்ந்து மன்னார் மாவட்டத்தில் பேசாலைக் கிராமத்தில் தங்கியிருந்த நாட்கள், அக்கிராம மக்கள் கொடுத்த ஆதரவை மறக்காத இராசையாவின் பிள்ளைகள் மக்களுக்கு உவந்த உதவி.

அன்னாரின் பிள்ளைகளான இ. கெங்காதரன் (கனடா), இ. கேதீஸ் (சுவீஸ்), திருமதி சு. பிறேமா (நோர்வே), திருமதி ர. ஜெகதீஸ்வரி (சுவீஸ்), பேரன் சி. நிலக்சன் (லண்டன்) ஆகியோர் இணைந்து பேசாலை பகுதிக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.06.2022) 420 பேருக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு பெறுமதிமிக்க இலவச மூக்கு கண்ணாடியும் வருகை தந்தவர்களுக்கு உணவும் வழங்கப்பட்ட நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எஸ். றோய் பீரிஸ் அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக 'விஷன் கெயாவின்' உதவியுடன் சுவீஸ் கிளை நேசக்கரங்களினால் மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

“உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்பது இதுதானா? | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY