கஞ்சாவுடன் நபர் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

கஞ்சாவுடன் நபர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கிருந்து ஒரு கிலோ 659 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றினர். அத்துடன், இதனை விற்பனைக்காக வைத்திருந்த 55 வயது நபரையும் கைது செய்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோகணவின் ஆலோசனைக்கமைய, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி டி. எஸ். எஸ். கே. தெலங்காவலகே தலைமையிலான பொலிஸ் குழுவினர் சனிக்கிழமை (22) பிற்பகல் காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போதே வியாபாரத்துக்காக கொண்டுவந்து பதுக்கிவைக்கப்பட்ட ஒரு கிலோ 659 கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.

கைதானவர் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று தெரிவித்த பொலிஸார் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கஞ்சாவுடன் நபர் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)