பூநகரியில் மதுபானசாலை  திறப்பதற்கு நிரந்தர தடை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

பூநகரியில் மதுபானசாலை திறப்பதற்கு நிரந்தர தடை

பூநகரி பிரதேச செயலக பிரிவில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை திறப்பதற்கு நிரந்தர தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் இந்தத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. மதுபானசாலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பாடசாலை, ஆலயம், ஆசிரியர் விடுதி மற்றும் பொது விளையாட்டு மைதானம் போன்றவை காணப்படுகின்றன.

எனவே, இந்த மதுபானசாலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகளால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மதுபானசாலை தொடர்பில் கடந்த 6ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

விசாரணைகளின் பின்னர் இன்று வரை மதுபானசாலையை திறப்பதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மதுபானசாலையைத் திறக்க நிரந்தர தடையுத்தரவை பிறப்பித்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பூநகரியில் மதுபானசாலை  திறப்பதற்கு நிரந்தர தடை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)