தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்பு

ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (01) சனி போராட்டம் ஒன்று நடைபெற்றது.

அந்தப் பகுதியில் வசிப்பவர்களே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்று (01) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டு வரும் காணியின் வாயிலில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் குறித்துத் தகவலறிந்த பொலிஸார் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

போராட்டக்காரர்கள்,

  • “மக்களுக்கு மனநோய் வேண்டாம்”
  • “மின்காந்த அலை, காற்றுக்கு நஞ்சு”
  • “மக்களை உடல், உள ரீதியாக பாதிப்புக்கு உள்ளாக்காதீர்கள்”

> “எங்கோ போகும் இடி மின்னலை எம்மை நோக்கி இழுக்க வேண்டாம்”

  • “நகர்த்து நகர்த்து தொடர்பாடல் கோபுரத்தை நகர்த்து”

போன்ற சுலோகங்கள் அடங்கிய பாதாதைகளைத் ஏந்தியிருந்ததுடன், அவற்றை கோஷங்களாகவும் எழுப்பினர்.

தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)