யாழ் வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணம், வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தங்கரத திருவிழா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.

அதன் முன்னதாக புதுப் பொலிவுடன் அமைக்கப்பட்ட புதிய தங்கரதம் வெள்ளோட்டம் இடம்பெற்றது.

இந்த தங்கரதத்தினை ஈழத்து சிறப்பு ஸ்தபதியான கலைவாணி சிற்பக்கூடத்தின் முதன்மைச் சிற்பியான சிற்பவாரிதி திரு கு. சந்திரதாசன் அவர்களின் தலைமையில் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஸ்தபதிகள் குழாமினால் நேர்த்தியாக இந்த தங்கரதம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பானது திருப்பதி வெங்கடாசலபதியின் தங்கரதத்தின் வடிவமைப்பினை ஒத்ததாகவும் ஈழத்தில் இருக்கின்ற கோயில்களின் தங்கரதங்களின் பார்க்க பெரிய தங்கரதமாக அமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளோட்டத்தினை தொடர்ந்து தங்கரதமான இன்று புதிய தங்கரதத்தில் அம்பாளின் திருவீதி வலம் இடம்பெற்றது.

யாழ் வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY