மின்சார சக்தி சைக்கிகள்  பாவனையில் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

அம்பாறை மாவட்டம் கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர் பகுதிகளில் மின்சார சக்தியில் சைக்கிளை தற்போது பொதுமக்கள் பரவலாக பயன்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது.

சுமார் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் சைக்கிள்களின் பாவனை அதிகளவில் உள்ளன. இந்த சைக்கிளின் பெறுமதி இலங்கை ரூபாயில் 2 இலட்சம் என்று கூறப்படுகின்றது.

8 மணித்தியாலங்கள் மின்சாரத்தின் உதவியுடன் சார்ஜ் செய்யப்படும் இந்த சைக்கிள் மின்சார மின்கலத்தின் சக்தியுடன் விரைவாக பயணத்தை ஆரம்பிக்கின்றது.

எரிபொருள் இல்லாமல் இந்த சைக்கிளை இலகுவாகப் பயன்படுத்தலாம். இரவிலும் மின்னொளியை பயன்படுத்தி பயணிக்க முடியும்.

மேலும் வீதியில் பயணிக்கின்ற போது எதிரே வருகின்ற வாகனங்களுக்கு சமிஞ்சை வழங்கக்கூடிய வசதியையும் கொண்டுள்ளது. ஒரே தடவையில் சுமார் 100 கிலோமீற்றர் தூரம் பயணிக்க முடியும்.

மின்சார சக்தி சைக்கிகள்  பாவனையில் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)