தனியாரின் காணியை கடற்படைக்கு அளக்க வந்தோரை எதிர்த்த மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – நீலங்காடு பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான 40 ஏக்கர் காணியை இலங்கை எழாறா கடற்படை முகாமுக்கு அளவிடுவதற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

குறித்த காணியை அளவிடுவதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் இன்று செவ்வாய்வருகை தந்தபோது அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

அதனையடுத்து அங்கு வந்த நில அளவைத் திணைக்களத்தினர், மக்களுக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்கு அளவிடுவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று எழுதி ஒப்பமிடப்பட்ட எழுத்து மூலமான ஆவணத்தைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் காணியின் உரிமையாளர்கள், சமூகமட்ட அமைப்பினர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

தனியாரின் காணியை கடற்படைக்கு அளக்க வந்தோரை எதிர்த்த மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)